Friday, June 10, 2011

Alex

ஒரு போதகர் தன் சீடர்களிடம் ஒருநாள் '' நீங்கள் கோபப்படும் போது ஏன் உரத்துக் கத்துகிறீர்கள்? என்று எப்போதாவது சிந்தித்தீர்களா? '' என்று கேட்டார். சில நிமிடங்களின் பின்னர் ஒருவர் '' நாங்கள் கோபப் படும்போது எங்கள் அமைதியை இழக்கிறோம். அதனால் தான் சத்தமாகக் கத்துகிறோம் '' என்று சொன்னார்.
போதகர் அந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளவில்லை. '' நீங்கள் அமைதியை இழந்தாலும் கேட்பவர் பக்கத்தில் இருக்கும் போது நீங்கள் அவர் காது கிழியக் கத்துவது ஏன்? ஏன் நீங்கள் அதே விடயத்தை கத்தாமல் , மெல்லிய குரலில் சொல்லக் கூடாது ?'' என்று திரும்பவும் கேட்கிறார். எவருக்கும் சரியான பதில் தெரியவில்லை.
அவர் தந்த விளக்கம் இதுதான் . இரண்டு பேர் ஒருவரோடு ஒருவர் கோபப்படும் போது அவர்களது மனங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகித் தூரத்தில் போகின்றன. அதனால்தான் அந்தத் தூரத்தைத் தாண்டி நீங்கள் சொல்லும் சொற்கள் மற்றவரைச் சென்றடைய எங்களையறியாமல் எங்கள் குரலை உயர்த்துகிறோம். எங்கள் கோபம் அதிகரிக்க , அதனால் மனங்களின் இடைவெளி மேலோங்க , அதற்கேற்ப எமது குரலும் மேலோங்குகிறது.

இருவர் ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? இதற்கு எதிர்மாறாக அவர்கள் மனங்கள் நெருங்கிப் போகின்றன. அதனால் தான் அவர்கள் மெதுவான குரலில் பேசுகிறார்கள். இன்னும் நெருங்கிப் போனதும் அது கிசு கிசுப்பாக மாறி விடுகிறது. காதல் முற்றிப் போய் விட்டால் அங்கு வார்த்தைகளே தேவையில்லாமல் போய் விடுகிறது. மௌனமே ஒரு மொழியாகி விடுகிறது . இது அவர்கள் மனங்களின் நெருக்கத்தைக் காட்டுகிறது.

என்ன அழகான விளக்கம் இதுநீங்கள் ஆத்திரப்பட்டுப்பேசும்போது மற்றவர் மனங்களைத் தூரத்தில் விலக்கும்வார்த்தைகளை பாவிக்காதீர்கள்.

No comments:

Post a Comment